இருபத்தியாறு வருட உள்நாட்டுப் போரில் ராணுவ ரீதியிலான வெற்றியை பெற்றுள்ளதாக அறிவித்துள்ள இலங்கை அரசு, ஜெனிவாவில் நாளை கூடவிருக்கும் ஐ.நா மனித உரிமை கழகத்தின் பதினோராவது சிறப்பு கூட்டத்தில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சந்திக்கவிருக்கிறது.

இதே போன்ற குற்றச்சாட்டுகள் விடுதலைப் புலிகள் மீதும் வைக்கப்பட்டிருந்தது. தனி நாடு கோரி போராடி வந்த அந்த அமைப்பு இப்போது தோல்வி அடைந்துவிட்டதாக கருதப் படுகிறது.

இருபிரிவினரையும் தண்டிக்கும் முயற்சியை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்திருக்கிறது. நாளை (மே -26) நடைபெறவிருக்கும் இந்த சிறப்பு கூட்டம் ஐ. நா மனித உரிமைக் குழு உறுப்பு நாடுகளால் கூட்டப்படுகிறது. மொத்தமுள்ள 47 நாடுகளில் பதினேழு நாடுகள் (கனடா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர் லாந்து, சுலோவாக்கியா, சுலோவேனியா, சுவிஸ், பிரிட்டன், சிலி, மெக்சிகோ, கொரியா, மொரிசியஸ், அர்ஜென்டினா, போஸ்னியா, உக்ரையின் மற்றும் உருகுவே) இக்கூட்டத்தை கூட்டியிருக்கின்றன.

இக்கழக கூட்டம் அமைதிக்கான முயற்சியில் பலனேற்படுத்தும் என்று நம்புவதாக அதன் தலைவர் மார்டின் உமொய்பி தெரிவித்தார். இதற்கிடையே மனித உரிமை கழகத்தின் தலையீட்டை தவிர்க்கும் பொருட்டு இலங்கை அரசாங்கம் தனது நட்பு நாடுகள் கையெழுத்திட்ட தீர்மானம் ஐ.நா விடம் அளித்திருக்கிறது. அதில் தீவிரவாதத்திற்கு எதிராக வெற்றிகரமாக போராடிவரும் தெற்காசிய நாடுகளின் பங்களிப்புகளை பாராட்டியும் சர்வதேச நாடுகளிடம் நிதி உதவி கோரியும் விண்ணப்பித்திருந்தது. அந்த பன்னிரண்டு நாடுகள் இந்தோனேசியா, சைனா, இந்தியா, சவூதி அரேபிய, மலேசியா, பாகிஸ்தான், பக்ரைன், பிளிப்பைன்ஸ், கியூபா, எகிப்து, நிகரகுவா மற்றும் பொலிவியா ஆகியனவேயாகும். இந்நிலையில், பல அரசு சாரா மனித உரிமை அமைப்புகள் பல ஊடக மறுப்பு மற்றும் பொய்த்தகவல்களை ஆயுதமாக பயன்படுத்தும் செயல்களில் சர்வதேசம் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளன.

"ஒரு பிரிவினரின் துப்பாகிகள் மவுனமடைந்தபின் நடைபெறும் உயிழப்புகள் அதிக கவனம் பெறுகின்றன. பாதுகாப்பு வளையத்தில் நடைபெறும் கொலைகளுக்கான விளக்கம் திசைதிருப்பலாக உள்ளது. சண்டை நடைபெறும் அல்லது நடைபெற்ற பகுதிகளில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் செய்தியை நம்ப வேண்டியதாக உள்ளது. அது முற்றிலும் உண்மையாக இருக்கும் வாய்ப்பு குறைவு" என்று ஐ.நா துணை பொது செயலாளரும், மனித உரிமை கழக ஒருங்கிணைப்பாளருமான ஜான் ஹோல்ம்ஸ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "எவ்வெப்போதெல்லாம் அனுமதி மறுக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் நடைபெறுபவை பற்றி கவலை பிறக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட உறுதி மொழிகள் உதாசீனப்படுத்தப் பட்டுள்ளன. நமது முக்கிய கவலை வெளியேறிய மக்களின் பாதுகாப்பு குறித்தே ஆகும்." என சென்ற புதனன்று தெரிவித்தார்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்து வந்துள்ள 2,50,000 மக்களின் உணவு மற்றும் மருந்து தேவையை பூர்த்தி செய்ய முடிந்தவரை ஐநா மற்றும் செஞ்சிலுவை செய்துவருகின்றன. 25,000 தற்காலிக தங்குமிடங்களை அது அமைத்துள்ளது. மேலும் பத்தாயிரம் அமையவிருக்கின்றன. போர் முடிந்த பின் தான் மறு சீரமைப்பை தொடங்க முடியும் என்றும் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் முடியாமல் அது சாத்தியமில்லை என்று கூறிவந்த அரசாங்கம் இவ்வருட இறுதிக்குள் மூன்று லட்சம் பேருக்கும் தங்குமிடங்கள் அமைக்கப் படும் என்று இப்போது கூறுவது விந்தையாக உள்ளது. சர்வதேச நிதியை கூறும் இச்சமயத்தில் இப்படியான உறுதிமொழிகளை வெற்றாக கொடுக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

மேலும், மனித உரிமைக்கான மருத்துவர்கள் குழுவில் இருந்த மூன்று தமிழ் மருத்துவர்களை விசாரணை என்ற பெயரில் அரசாங்கம் கைது செய்தபின் இன்னும் வெளிவிடவில்லை. செய்தியாளர்களிடம் தந்த அறிக்கையில் ஹோல்ம்ஸ் அந்த மருத்துவர்கள் செய்துவந்த பணியை பாராட்டியும் அவர்களின் செயல்களை வீரதீரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: இன்டர் பிரஸ் சர்வீஸ்

0 comments:

Subscribe to: Post Comments (Atom)